Wednesday, March 3, 2010

மூஞ்ச பாரு கொஞ்சம் சிரிச்சா என்னவாம்??

1. மண்ணிலிருந்து மண்னெண்ணெய் எடுக்கலாம்; கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா?

2. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டா

போலீஸ் வரும்;

ரயில்வே ஸ்டேஷனுக்கு

போன் போட்டா

ரயில் வருமா?


3. தண்ணியில கப்பல் போனா ஜாலி;

கப்பல்ல தண்ணி போனா காலி!


4. ஹோட்டலில் காசு கொடுக்கலேனா

மாவாட்டச் சொல்லுவாங்க....

ஆனால் பஸ்ல காசு கொடுக்கலைன்னா

பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா?


5. யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி!

நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!


6. அம்மா அடிச்சா வலிக்கும்...

போலீஸ் அடிச்சா வலிக்கும்...

ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்...

ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?


7. என்ன தான் ரயில் வேகமா போனாலும்,

அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும்.


8. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும்.

ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும்.


9. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..

ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் பேலன்ஸ்(balance) பண்ண முடியும்.


10. வாயால நாய்ன்னு செல்ல முடியும்ஸ ஆனா

நாயால வாய்ன்னு செல்ல முடியாது.


11. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது

ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும்.


12. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா?


13. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா?


14. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா?


15. எவ்வளவு பெரிய பல் டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா?


16. டீ ஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா?


17. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.

************************************

0 comments:

பாடுமீன் செய்திகள்